மேலூரில் மாட்டுவண்டி பந்தயம்.

மதுரை மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update: 2025-10-05 05:29 GMT
மதுரை மாவட்டம் மேலூர் வல்லாளப்பட்டியில் நாகம்மாள் இளம நாயகி அம்மன் கோயில் பால்குட உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று (அக்.4)மாட்டு வண்டி பந்தயம் வல்லாளப்பட்டி ரோடு முதல் அழகர் கோவில் வரை நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி 12 ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டிகள் 29 ஜோடிகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் , கேடயம் வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை ரோட்டில் இருபுறமும் நின்று ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Similar News