உத்தமபாளையம் காவல்துறையினருக்கு உத்தமபாளையம் பகுதி வழியாக செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் 80 வயது மதிக்கத்தக்க பெண் இறந்த நிலையில் கிடப்பதாக நேற்று தகவல் கிடைத்தது காவல்துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்தவர் நாராயண தேவன் பட்டி பகுதியை சேர்ந்த குருவம்மாள் (80) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.