தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் முன் கூட்டியே விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க 33 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆர்.டி.ஓ., எஸ்.பி., தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தபின் உரிய அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.