தடா கோவில் டூவீலருடன் சாலையில் நின்றவர் மீது சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.
தடா கோவில் டூவீலருடன் சாலையில் நின்றவர் மீது சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து.;
தடா கோவில் டூவீலருடன் சாலையில் நின்றவர் மீது சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வெஞ்சமாங்கூடலூர் அருகே குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 65. இவர் திங்கள் கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் தடா கோவில் பிரிவு சாலை அருகே தனது டூவீலர் உடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி கீழ்பாகம் அருகே வளையாபட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் 17 வயது சிறுவன் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் பழனிச்சாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மகன் சிவகுமார் வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.