பட்டாகத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு
மதுரை பேரையூர் அருகே பட்டாக்கத்தி செல்போன் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை மாவட்டம் பேரையூர் எஸ்.பாரைப்பட்டி சின்னகாளை மகன் தங்கராஜ்( 24) இவரும் இவரது சகோதரரும் நேற்று முன்தினம் (அக்.5) நள்ளிரவில் தூத்துக்குடியிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக பேரையூர்--டி.கல்லுப்பட்டி சாலையில் உள்ள கொண்டுரெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் பட்டாகத்தியால் தங்கராஜை தாக்கி அவரின் சகோதரரிடம் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.தற்போது காயமடைந்த தங்கராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.