தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (29). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியினால் அவதிப்பட்டு வந்த பவித்ரா நேற்று (அக்.7) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.