வாங்கல் கடைவீதியில் டூ வீலர் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு.

வாங்கல் கடைவீதியில் டூ வீலர் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு.;

Update: 2025-10-09 13:28 GMT
வாங்கல் கடைவீதியில் டூ வீலர் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா வாங்கல் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் வயது 48. இவர் புதன்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் கரூர் - மோகனூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வாங்கல் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து செல்லப்பன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது . இந்த சம்பவத்தில் செல்லப்பனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த செல்லப்பனின் மனைவி சுசீலா வயது 47 என்பவர் அளித்த புகாரில் வாங்கல் காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News