சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை
சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான புளியம்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், களப்பகுளம், அழகாபுரி, இருமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இன்று மாலை குளிர்ந்த காற்று வீசியதால் கொட்டி தீர்த்தது கனமழை. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.