க.விலக்கு காவல் நிலைய காவல்துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.10) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ம.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் அப்பகுதியில் உள்ள அவரது டீக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. டீக்கடையில் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.