குருவிகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இன்று பலி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இன்று பலி;

Update: 2025-10-13 06:19 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழஅழகு நாச்சியாபுரம் கிராமத்தை சார்ந்த சீனிபாண்டியன்(65) என்பவர் இன்று காலையில் கிணற்று அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார், இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News