கரூர் அருகே கணவன்-மனைவி சென்ற டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. பெண் படுகாயம்.

கரூர் அருகே கணவன்-மனைவி சென்ற டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. பெண் படுகாயம்.;

Update: 2025-10-13 14:00 GMT
கரூர் அருகே கணவன்-மனைவி சென்ற டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. பெண் படுகாயம். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சிதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வயது 50. இவரது மனைவி கல்பனா வயது 44. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:45-மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூ வீலரை பாஸ்கர் ஓட்டிச் செல்ல அவரது மனைவி கல்பனா பின்னால் அமர்ந்து சென்றார். இவரது வாகனம் தனியார் ஷோரூம் எதிரே சென்றபோது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனம் பாஸ்கர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற கல்பனாவிற்கு பின்னந் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News