புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தியடிப்பட்டி பிரிவு சாலையில் சென்ற 6 பள்ளி மாணவர்கள் உட்பட 15 பேரை கதண்டுகள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.