சர்ச் கார்னர் அருகே அரசு பேருந்தை வேகமாக இயக்கியதால் மூதாட்டி பேருந்தின் முன் கதவில் விழுந்து விபத்து.

சர்ச் கார்னர் அருகே அரசு பேருந்தை வேகமாக இயக்கியதால் மூதாட்டி பேருந்தின் முன் கதவில் விழுந்து விபத்து.;

Update: 2025-10-14 13:58 GMT
சர்ச் கார்னர் அருகே அரசு பேருந்தை வேகமாக இயக்கியதால் மூதாட்டி பேருந்தின் முன் கதவில் விழுந்து விபத்து. கரூர் மாவட்டம் திரு முக்கூடலூர் நடுத்தெரு ரேஷன் கடை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி மின்னல் கொடி வயது 70. இவர் வெள்ளிக்கிழமை அன்று வெங்கமேட்டில் இருந்து கரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணித்தார். இந்த அரசு பேருந்தை கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சிவசாமி வயது 49 என்பவர் ஓட்டிக்கொண்டு சர்ச் கார்னர் அருகே வந்தபோது பேருந்தை வேகமாக இயக்கியதால் பேருந்துக்குள் பயணித்த மின்னல் கொடி நிலை தடுமாறி பேருந்தின் முன் பக்க கதவில் விழுந்தார். இதில் வலது இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த மின்னல் கொடியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்னல் கொடி அளித்த புகாரில் அரசு பேருந்தை கவனக்குறைவாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான அரசு பேருந்து ஓட்டுனர் சிவசாமி மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News