பனை விதை நடவு செய்யும் பணி

கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்;

Update: 2025-10-16 03:38 GMT
திண்டுக்கல் மாவட்டம், ம.மூ.கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வு 24.09.2025 முதல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், நீர்நிலைககளின் கரையோரங்களில் தரிசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பனை விதை நடவு செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு 5 இலட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட நிகழ்வாக, தமிழ்நாடு வனத்துறை, திண்டுக்கல் வனக்கோட்டம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக பனை விதை நடுவதற்கான தொடக்க விழா, ம.மூ. கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களிடையே மரம் நடுவதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து பள்ளியின் அருகில் அமைந்துள்ள சக்கம்பட்டி குளத்தில் 3000 பனை விதைகள் பள்ளியின் பசுமைப்படை, ஜீனியர் ரெட் கிராஸ், சாரணர்கள் சார்பில் 130 மாணவர்கள், மாவட்ட பசுமைத்தோழி மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஆகியோர் விதை நடவு செய்தனர். நடவு செய்யப்பட்ட பனை விதைகளின் விபரங்களை udhavi app-ல் வனச்சரக அலுவலர்கள் பதிவேற்றம் செய்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி வனப் பாதுகாவலர் செல்வி. கு வேல்மணி நிர்மலா, 1600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News