ஆயுதப்படை காவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம்!

ஆயுதப்படை காவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம்!;

Update: 2025-10-18 05:49 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் 16பேருக்கு தாலுகா காவலர்களாக பணி மாறுதல் வழங்கி எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 16 காவலர்களை இன்று தாலுகா காவலர்களாக பணி நியமனம் செய்து, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மாவட்ட காவல் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கலந்தாய்வு நடத்தப்பட்டு, விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News