மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு.

மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு.;

Update: 2025-10-23 12:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை மின் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (55). பெயிண்டர். இவர் முதல் மாடியில் பெயிண்ட் அடித்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து ஒசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News