ராசிபுரம் நகரில் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற போலியோ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது.

ராசிபுரம் நகரில் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற போலியோ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது.;

Update: 2025-10-24 15:17 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இப்பேரணி நடைபெற்றது. முன்னதாக ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கிய பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநரும், ராசிபுரம் குழந்தைகள் நல மருத்துவருமான எம்.ராமகிருஷ்ணன் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம், ஊனம் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பன போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரகங்கள் வினியோகம் செய்தவாறு கல்லூரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், கவரைத்தெரு கடை வீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றடைந்தது. பின்னர் போலியாவை முடிவுக்கு கொண்டு வருவோம் என கல்லூரி மாணவ மாணவியர், ரோட்டரி நிர்வாகிகள் ஒன்று திரண்டு உறுதியேற்றனர். விழிப்புணர்வு பேரணியில் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம், ராசிபுரம் எஜூகேசனல் சிட்டி ரோட்டரி கிளப், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல், இன்னர் வீல் சங்கம், ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ , இந்திய மருத்துவ சங்கம், ரோட்டராக்ட் கிளப் போன்றவற்றின் நிர்வாகிகள், அரசு, தனியார் கல்லூரி மாணவ மாணவியர் என பலரும் பங்கேற்றனர். இப்பேரணியில் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் எல்.ஹரிஹரன், ராசிபுரம் எஜூகேசன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஜி.பாஸ்கர், இன்னர் வீல் சங்கத் தலைவர் சிவலீலஜோதி கோபிநாத், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பி.மாணிக்கம், ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவர் மணிமேகலை உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Similar News