அறந்தாங்கி அருகே கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி பெரியநாயகி, கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில், புகாரின் அடிப்படையில் நாகுடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெரியநாயகி இறந்து சடலமாக மிதப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய நாகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.