நாமக்கல் கட்டுனர் சங்கம் சார்பில் செவ்வந்திப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் !

இதுவரை நடைபெற்ற 16 முகாம்களில் மொத்தம் 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-11-09 15:22 GMT
செவிந்திப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுனர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், செவந்திப்பட்டியில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் 17வது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அகில இந்திய கட்டுநர் சங்கம் நாமக்கல் மைய தலைவர் டாக்டர் பி.எஸ். டி .பி எஸ். தென்னரசு தலைமை தாங்கினார், தொட்டியம் ஜெமினி குழும நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன்,நாமக்கல் சத்தியமூர்த்தி அன் கோ சேர்மன் வீ.சத்தியமூர்த்தி, நாமக்கல் கட்டுனர் சங்க அறக்கட்டளை செயலாளர் ஜி.ஆர்.எம்.கன்ஸ்ட்ரக்சன் கணேசன், எஸ்.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக தொட்டியம் டாக்டர் அபிஷேக் சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.இதுவரை நடைபெற்ற 16 முகாம்களில் மொத்தம் 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவம் , எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் சுகுமார், பிஏஐ நாமக்கல் மையத்தின் செயலாளர் இளையராஜா, இணை செயலாளர் சகாதேவன் மற்றும் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர், உடல் பரிசோதனை செய்துகொண்டனர் .

Similar News