பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
10 புள்ளி அஞ்சு சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும்;
பெரம்பலூரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன அந்த வகையில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் இதே கோரிக்கை வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு,பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மருதவேல், தலைமையில் மாவட்டத் தலைவர் தமிழ்ஒளி .வன்னியர் சங்க தலைவர் அசோகன். மாநில துணைத்தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, மாவட்ட அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் குமரவேல். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்தியசீலன். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ். மாநில துணைத்தலைவர் பிஆர்பி வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர் மேலும் இக்கூட்டத்தில் நகர செயலாளர் சக்திகுமார் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கண்ணதாசன்.மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் தேவராஜன். மாவட்ட இளைஞரணி தலைவர் இளவேனில் ,மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளை பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.