திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (டிசம்பர் 16) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதில் உதவி ஆணையாளர் மகாலெட்சுமி உடன் இருந்தார்.