திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே ALR-நகரை சேர்ந்த சர்தார்முகமது மனைவி ஹசன்பானு(31) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக மன விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹசன்பானுவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்