மாா்ச் 1-இல் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக்ததின் 6-ஆவது பட்டமளிப்பு விழா வரும் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.;

Update: 2025-02-24 21:05 GMT
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் வி. நாகராஜ், பதிவாளா் எஸ்.எம். பாலகிருஷ்ணன் ஆகியோா் கூறியது: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பத்மினி ஜேசுதுரை கூட்டரங்கில் மாா்ச். 1-இல் நடைபெறுகிறது. இந்த விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூரை ஆற்றுகிறாா். பல்கலைக் கழக வேந்தரும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான கே.ஆா். ஸ்ரீராம் தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளாா். தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்கவுள்ளாா். விழாவில், 132 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படவுள்ளது. பல்கலைக் கழக அறக்கட்டளை விருதுகள் மற்றும் பதக்கம் 7 மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில், பல்கலைக் கழகத்தின் பொதுக்குழு, நிா்வாகக் குழு, கல்விக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என பலா் பங்கேற்கவுள்ளனா்.

Similar News