பர்கூர் அருகே டிராக்டர் மோதி 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

பர்கூர் அருகே டிராக்டர் மோதி 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.;

Update: 2025-06-07 01:32 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள எர்கெட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவருடை மனைவி சரிதா. இவர்களுக்கு 1½ வயதில் தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவம் அன்று குழந்தை தருண் வீட்டின் முன்பு விளையாடிய போது அவ்வழியாக வந்த டிராக்டர், குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை தருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், குழந்தையில் உடலை மீட்டு டிராக்டர் டிரைவர் கொல்லப்பள்ளியை சேர்ந்த கோபி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News