ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் 500-க்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திமுக-வினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*;

Update: 2025-03-29 06:30 GMT
ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • whatsapp icon
அரியலூர், மார்ச் 29- தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் செயல் பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக மத்திய அரசு ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதி பஸ்நிறுத்தம் அருகில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவும், தா.பழுர் ஒன்றிய செயலாளருமான க.சொ.க.கண்ணன் தலைமையில், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திமுக-வினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்களை கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Similar News