மாரியம்மன் கோவில் விழாவையொட்டி பெண்கள் 108 பால்குட ஊர்வலம்

விழா

Update: 2024-07-23 12:25 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகுகுத்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றதோடு, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், சிலர் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். சுருக்கு

Similar News