தாராபுரம் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

தாராபுரம் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

Update: 2024-09-15 12:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாராபுரம் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கழக திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பூளவாடி பிரிவு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பூளவாடி பிரிவு பகுதியில் இருந்து மௌன ஊர்வலமாக சின்னக்கடை வீதி, டி.எஸ். கார்னர், ஜவுளிக்கடை வீதி, பூக்கடை கார்னர் வழியாக திமுக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக அண்ணா சிலையை அடைந்தனர். அண்ணா சிலைக்கு வந்த மௌன ஊர்வலம் அண்ணா சிலையை நிறைவடைந்த உடன் அங்கு உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு அமைச்சர்கள் அண்ணா சிலை பகுதியில் திமுக கழகக் கொடியை ஏற்றி வைத்து அங்கு உள்ள குழந்தைகளுக்கும் ,பெரியோர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளர் ஆன எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் , மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை. தமிழரசு,சின்னக்காம்பாளையம் பேரூர் செயலாளர் ரா. பன்னீர்செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பவர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் , திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தாராபுரம் ஒன்றிய ,நகர, பேரூர் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News