நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கி குளிப்பதற்கு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் 12 நாட்களுக்கு பின்பு இன்று (மார்ச் 8) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.