தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மண்ணுரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு மக்கள் விடுதலை முண்ணனி கோரிக்கை.,

தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற மண்ணுரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு மக்கள் விடுதலை முண்ணனி கோரிக்கை.,

Update: 2024-09-26 04:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற மண்ணுரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு மக்கள் விடுதலை முண்ணனி கோரிக்கை., பொள்ளாச்சி.,செப்டம்பர்.,26 மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மண்ணுரிமை மீட்பு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் நடைபெற்றது., நகர தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது., தமிழகத்தை 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்கின்ற திராவிட ஆட்சியாளர்கள் நிலத்தின் மீது கவனம் செலுத்த முடியாத காரணத்தால் பஞ்சமி நிலங்களை மீட்டு இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் உழுதவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற அடிப்படையில் யாரெல்லாம் நிலத்தை மீட்டு விரட்டப்பட்டவர்களோ  அவர்கள்  குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் மேலும் சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளாகியும் இன்னும் தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு முறை,கோவில் நுழைவு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது எனவே தமிழக அரசு சமூக நலத்துறை இதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்., பேட்டி.. மாரிமுத்து., மாநிலத் தலைவர் மக்கள் விடுதலை முன்னணி., ம.சக்திவேல்.பொள்ளாச்சி..9976761649.,

Similar News