புஞ்சைபுளியம்பட்டியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு

புஞ்சைபுளியம்பட்டியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு

Update: 2024-09-30 06:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புஞ்சைபுளியம்பட்டியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு புஞ்சைபுளியம்பட்டியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். புஞ்சைபுளியம்பட்டியில் தோட்டத்து சாலை என்ற இடத்தில் வசித்து வருபவர் சரோஜினி (வயது 74). இவருடைய மகன் ராஜசேகர். மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு கிறார்.ராஜசேகரின் மனைவி புஷ்பா (37) மற்றும் 2 குழந்தை கள் சரோஜினியுடன் உள்ளனர். நேற்று முன்தினம் புஷ்பாக்கு குழந்தைகளை அழைத்துக் தீர் கொண்டு கோவை மாவட்டம்மேட்டுப்பாளையத்தில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக ண இருந்த சரோஜினி நேற்று வ முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நள்ளிரவில் வீட்க்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப் போது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடுவது தெரிந்தது. அதைப் பார்த்து சரோஜினி திருடன், திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சரோஜினி வீட்டுக்குள் சென்று பார்த் தார். அப்போது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் வீரா வந்து வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து,13 பவுன் நகை களை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

Similar News