கிருஷ்ணகிரி: பயிற்சி பெற்ற 14 பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
கிருஷ்ணகிரி: பயிற்சி பெற்ற 14 பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், மணிமாலை தயாரிக்கும் தொழிலுக்கு கடன் அனுமதி பெற்று, பயிற்சி பெற்ற 14 பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 04.08.2025வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், பிரசன்ன பாலமுருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.