வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டியில் தேனிகள் கொட்டியதில் 15 பேர் காயம்.
வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டியில் தேனிகள் கொட்டியதில் 15 பேர் காயம்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டியில் தேனிகள் கொட்டியதில் 15 பேர் காயம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி மல்லங்குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டி உள்ளது. அந்த தேங்காய் மண்டியில் இன்று சுமார் 20 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஒரு பகுதியில் கட்டி இருந்த தேன் கூண்டு கலைந்து அங்கு தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆண்கள் மாற்று பெண் தொழிலாளர்களை கொட்டியுள்ளது. இதில் 15 க்ககும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ராமநாயக்கணன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ராமநாயக்கன் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.