கள்ளக்குறிச்சியில் 16ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

முகாம்

Update: 2024-08-10 07:00 GMT
கள்ளக்குறிச்சியில் வரும் 16ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 16ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஏ.எல்.சி., சர்ச் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு, சில்லரை விற்பனை துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர். மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் இணைதளம் மூலம் பதிவு செய்து முகாமில் பங்கேற்று பயனடையலாம். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News