ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

கைது

Update: 2024-08-18 04:15 GMT
உளுந்துார்பேட்டை அருகே ஏரி மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த செரத்தனுார் ஏரியில் கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்து, திருவெண்ணைநல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் சுதர்சனன், 38; ஜே.சி.பி., டிரைவர் பாச்சாப்பாளையம் வைத்தியலிங்கம் மகன் அய்யனார், 19; ஆகிய இருவரையும் கைது செய்தனர்

Similar News