இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது!
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் இளைஞர் கொலை வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.;
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி, பொன்நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் வெள்ளைக்கண்ணு (24). கட்டடத் தொழிலாளியான இவரை வீட்டருகே கடந்த 3ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, 5 பேரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் செல்வக்குமார் (23), நாசரேத் வெள்ளமடத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (28) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.