மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் 2 வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை ஊழியர்களின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டி*
மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் 2 வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை ஊழியர்களின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டி*;
கனிம வள கொள்ளை தெரிந்தும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்த மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் அரசியல் தலையிடும் ஆட்சியரின் தலையிடும் இருப்பதாக மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் 2 வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை ஊழியர்களின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டி விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தில் கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கனிம வள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் புதன் கிழமை உத்தரவிட்டார். மேலும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,உதவி வேளாண்மை அலுவலர், மேலும்,நீர்வளத்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட 7 பேரை சஸ்பென்ட் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதனையடுத்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியை புறக்கணித்து நேற்று(13/2/25) காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இன்றும் 2 வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் அருப்புக்கோட்டை, சாத்தூர்,ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தவைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் இ .குமாரலிங்கபுரம் பகுதியில் கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற கனிம வள கொள்ளை தெரிந்தும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்த மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் அரசியல் தலையிடும் ஆட்சியரின் தலையிடும் இருப்பதாகவும் இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள தற்காலிக பணி இடை நீக்கத்தை மாவட்ட ஆட்சியர் திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டி