சேலத்தில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-03-07 03:07 GMT
சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் நெய்க்காரப்பட்டி பெரியகளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் 750 கிராம் கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாரப்பட்டியை சேர்ந்த நவீன் பிரசாந்த் (வயது 26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்பிரசாந்தை கைது செய்தனர். இதேபோல் கொண்டலாம்பட்டி போலீசார் சிவதாபுரம் பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News