மணவாளக்குறிச்சி : 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கன்னியாகுமரி;

Update: 2025-03-11 12:42 GMT
குமரி மாவட்டம் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்தவர் சுமதி (31 ). இவருக்கும் திருச்செந்தூர் கோவில் தெரு சேர்ந்த தர்மராஜ் (45) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு நேகா (9) என்ற மகளும் தருண்குமரன் (7)என்ற மகன் உள்ளனர்.       தர்மராஜ் திருச்செந்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி தாயார் உடல்நிலை சரியில்லை என்பதால் சுமதி தனது இரண்டு குழந்தைகளுடன் அம்மாண்டி விளைக்கு வந்துள்ளார். இங்கு 7 நாட்கள் தங்கி இருந்து  தாயாரை கவனித்து விட்டு பின் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திருச்செந்தூருக்கு செல்லவில்லை.      இது குறித்து தர்மராஜ் மாமனார் மாமியாரிடம் போனில் கேட்டபோது சுமதி 2 பிள்ளைகளுடன் மாயமாகி விட்டது தெரிய வந்தது. இதையடுத்து தர்மராஜ் உடனடியாக அம்மாண்டி விளை  புறப்பட்டு வந்தார். இங்கு பல இடங்களிலும் அவர் தேடியும்  மனைவி குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை எடுத்த தர்மராஜ் மனவளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News