சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை கைது செய்து

180 ml அளவுள்ள ( Black Peral) 30 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-06-26 13:38 GMT
சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை கைது செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 26.06.2025 பேரளி பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் விஜய கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த 1.மதியழகன் (37) 2.ராமு (37) ஆகிய இரண்டு நபர்களும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தனர்.இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 180 ml அளவுள்ள ( Black Peral) 30 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மேற்படி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News