அஞ்செட்டி: சரக்கு வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்
அஞ்செட்டி: சரக்கு வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தாண்டியம் மற்றும் கோட்டையூர் பகுதிகளைச் சேர்ந்த 21-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு பிக்கப்வேனில் குந்துக்கோட்டை பகுதிக்கு பூக்கள் அறுவடை செய்ய சென்ற போது குந்துக்கோட்டை மேலகிரி என்ற இடத்தில் வாகனம் கவிழ்ந்து பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெண்களை மீட்ட போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்