கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் 200 வாழைகள் சேதம்

கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் 200 வாழைகள் சேதம்

Update: 2024-10-01 12:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் 200 வாழைகள் சேதம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை கிராமம் குளத்துக்காடு முத்தான் காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 63). விவசாயி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் வாழைகள் பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கருப்புசாமி தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் சேதமாகின. அந்தியூர் வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை பார் வையிட்டு யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழைக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News