வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.
வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.;

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை. திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த கூலி தொழிலாளி சையத் லியாகத் அலி ( 52). இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 7.10.2022 அன்று அதே பகுதியில் சாலையோரம் விளையாடி கொண்டு இருந்த 4 வயது சிறுமியை சையத் லியாகத் அலி சிறுமியை தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து சையத் லியாகத் அலியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை இன்று முடிந்து சையத் லியாகத் அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கடத்தி சென்றதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி மீனாகுமரி உத்தரவிட்டார்.