இந்த 23 பேரின் பெற்றோரிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பது எப்போது? - நயினார் நாகேந்திரன்
காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ஒரே வரியில் ‘சாரி’ எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஓர் அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் காவல் நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்துக்குரிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்: பிரபாகரன் (45) - நாமக்கல்சுலைமான் ( 44) - திருநெல்வேலிதாடிவீரன் (38) - திருநெல்வேலிவிக்னேஷ் (25) - சென்னைதங்கமணி (48) - திருவண்ணாமலைஅப்பு (எ) ராஜசேகர் (31) - சென்னைசின்னதுரை (53) - புதுக்கோட்டைதங்கபாண்டி (33) - விருதுநகர்முருகானந்தம் (38) - அரியலூர்ஆகாஷ் (21) - சென்னைகோகுல்ஸ்ரீ (17) - செங்கல்பட்டுதங்கசாமி (26) - தென்காசிகார்த்தி (30) - மதுரைராஜா (42) - விழுப்புரம்சாந்தகுமார் (35) - திருவள்ளூர்ஜெயகுமார் (60) - விருதுநகர்அர்புதராஜ் (31) - விழுப்புரம்பாஸ்கர் (39) - கடலூர்பாலகுமார் (26) - ராமநாதபுரம்திராவிடமணி (40) - திருச்சிவிக்னேஷ்வரன் (36) - புதுக்கோட்டைசங்கர் (36) - கரூர்செந்தில் (28) - தருமபுரி இவர்கள் உள்ளிட்ட 23 பேரின் பெற்றோரிடமும், மனைவி - மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் புகைப்படம் - வீடியோ ஷூட் எப்போது நடக்கும்? என்று அதில் கூறப்பட்டுள்ளது.