கள்ளச்சாராய வழக்கில் 24 பேருக்கு காவல் நீட்டிப்பு

நீட்டிப்பு

Update: 2024-09-14 02:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இதுதொடர்பாக 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களின் காவல் நேற்று முடிவடைந்தது. அதனையொட்டி, கடலுார் மத்திய சிறையில் உள்ள 24 பேரையும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நேற்று காணொளி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை வரும் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News