சங்கரன்கோவிலில் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு
கிரிக்கெட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் டர்ப் மைதானத்தில் மாவட்ட அளவிலான கோட்ஸ் கப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற, வர்மா வைபர்ஸ் அணியினருக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், வெற்றிக்கோப்பை மற்றும் ரொக்கப் பணம் ரூ.25,000 பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் கூட இணைந்து விளையாடிய போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.