அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேற்று (பிப்.26) ஆய்வு
ஆய்வு;
ஆண்டிபட்டி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேற்று (பிப்.26) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விடுதி காப்பாளர் வெங்கடேஸ்வரனிடம் மாணவர்களின் வருகை பதிவேடுகள், விடுதியின் தரம் குறித்து கேட்டார். பதிவேடுகளை முறையாக பராமரிக்காத காப்பாளர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அதிருப்தி அடைந்த கலெக்டர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.