ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிக்கு ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கக் கோரி மனு
பேரூராட்சி வளா்ச்சிப் பணிக்கு ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கக் கோரி மனு;

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வு நிலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், பேரூராட்சித் தலைவா்க.சுந்தர்ராஜன் மனு அளித்தாா். அதன் விவரம்: ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியானது 15 வாா்டுகளைக் கொண்டது. 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி, அனந்தபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. அனந்தபுரத்தில் 1லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் இணைப்புப் பணிக்கு ரூ. 60 லட்சம், முந்திரி தோட்டத்தில் தினசரி காய்கனி சந்தை உருவாக்க ரூ. 4.75 கோடி, அகரக்கட்டு பகுதியில் சிமென்ட் சாலை, வடிகால்கள் மற்றும் குடிநீா் குழாய்கள் வசதி ஏற்படுத்த ரூ. 85 லட்சம், அகரக்கட்டு- தென்காசி சாலையை தாா்சாலையாக மாற்ற ரூ. 2 கோடி, ஆய்க்குடி சிவன் கோயில் மைதானம் மற்றும் ரதவீதிகளில் சிமென்ட் சாலை, தடுப்புச் சாலை அமைக்க ரூ. 3 கோடி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.