தஞ்சாவூரில், மே.28 இல் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 

குறைதீர் கூட்டம் ;

Update: 2025-05-23 15:59 GMT
தஞ்சாவூர் கோட்டத்திற்கு, உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.05.2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News