தீரன் நகரில் அத்துமீறி வீடு புகுந்து அறிவாளை காட்டி ரூ 28 ஆயிரம் மதிப்பிலான பொருள் பணம் களவாடிய 5- பேர் கைது.

தீரன் நகரில் அத்துமீறி வீடு புகுந்து அறிவாளை காட்டி ரூ 28 ஆயிரம் மதிப்பிலான பொருள் பணம் களவாடிய 5- பேர் கைது.

Update: 2024-10-15 13:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீரன் நகரில் அத்துமீறி வீடு புகுந்து அறிவாளை காட்டி ரூ 28 ஆயிரம் மதிப்பிலான பொருள் பணம் களவாடிய 5- பேர் கைது. கரூர் மாவட்டம் வெங்கமேடு தீரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் பூபாலன் வயது 28. இவரப் பகுதியில் டெக்ஸ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் இவரது வீட்டுக்குள் 5- பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, எல்இடி டிவி மற்றும் ரூபாய் 2500 ரூபாய் கத்தியை காட்டி மிரட்டி களவாடி சென்றனர். இது குறித்து பூபாலன் காவல் நிலையத்தில் அடித்த புகாரி பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், நல்லிபாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் வயது 25, அருகில் உள்ள சுல்தான் பேட்டையைச் சேர்ந்த நிர்மல் குமார் வயது 24, அருகிலுள்ள பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம் அருகே ராஜா நகரை சேர்ந்த கீர்த்தி வாசன் வயது 27, பரமத்தி வேலூர் உப்பிலையார் தெருவை சேர்ந்த முஸ்தபா மகன் சையது அபுதாஹிர் வயது 31,கேரள மாநிலம், பாலக்காடு, மன்னார்காடு அருகிலுள்ள கதியான் கூடு பகுதியைச் சேர்ந்த விபின் வயது 25 ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Similar News