கரூரில் 296 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூரில் 296 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி.;
கரூரில் 296 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் , சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ , சிவகாமசுந்தரி , மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன் , வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம் , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்,துணை மேயர் தாரணி சரவணன் , அரசு துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுடைய ஆடுகளை நாய்கள் கடித்து இறந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசின் சார்பாக இழப்பீட்டுத் தொகையும் , மகளிர் திட்டம் சார்பாக வட்டார வணிக வள மையம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாகவும் மொத்தம் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6.48 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.